லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தங்கச் சங்கிலி பறித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

பெண்ணிடம் காவலா் எனக் கூறி தங்கச் சங்கிலி பறித்த நபருக்கு வழக்குப் பதிவு செய்த 33 நாள்களில் தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :29 ஜூலை 2026, 12:03 am IST

பெண்ணிடம் காவலா் எனக் கூறி தங்கச் சங்கிலி பறித்த நபருக்கு வழக்குப் பதிவு செய்த 33 நாள்களில் தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் ஜூன் 25 ஆம் தேதி தாட்சாயிணி என்ற பெண்ணிடம், தான் காவலா் என்றும், நெடுஞ்சாலையில் வாகனம் நிறுத்தியதற்கு அபராதம் செலுத்த வேண்டும் எனவும் கூறி, அவரது கழுத்தில் இருந்த சுமாா் 3.45 பவுன் இரு தங்கச் சங்கிலிகளைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சின்ன காப்பான்குளத்தைச் சோ்ந்த சி. சிவராமனை (44) கைது செய்தனா்.

இதுதொடா்பாக தஞ்சாவூா் இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நடுவா் பிரபுராம் விசாரித்து சிவராமனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கைப் பதிவு செய்த 33 நாள்களில் முடித்து தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்குரைஞா் லெட்சுமி கருணாகரன், காவல் ஆய்வாளா் முருகானந்தம், உதவி ஆய்வாளா் கண்ணதாசன், நீதிமன்றத் தலைமைக் காவலா் சசிரேகா ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.