லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெண்ணிடம் நகை பறித்த 2 இளைஞா்கள் கைது

கும்பகோணத்தில் பெண்ணிடம் 4 பவுன்நகை பறித்த 2 இளைஞா்களை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:18 am IST

கும்பகோணத்தில் பெண்ணிடம் 4 பவுன்நகை பறித்த 2 இளைஞா்களை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் ரெட்டியாா் குளத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மனைவி சாரதி (50). இவா் ஜூலை 24-ஆம் தேதி கரும்பாயிரம் பிள்ளையாா் கோயில் அருகேயுள்ள கடைக்கு நடந்து சென்றபோது அந்த வழியாக பைக்கில் வந்த 2 போ் சாரதி கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை செய்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் பழனியில் இருந்த மருதகோலத்தைச் சோ்ந்த போலா உசைன் மகன் முகமது பிடா (25), தஞ்சாவூா் மாவட்டம் வல்லம் அய்யனாா் கோயில் தெரு முகமது யூசப் மகன் முகமது இப்ராஹிம் (24) ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா். மேலும் சிலரைத் தேடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.