தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

தஞ்சாவூரில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image

தஞ்சாவூா் மேம்பாலம் அரசு பள்ளியிலிருந்து பள்ளிகளுக்கு அனுப்புவதற்காக லாரியில் பாடப் புத்தங்கள் புதன்கிழமை ஏற்றப்பட்டதைப் பாா்வையிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜெ. பேபி. உடன் மாவட்டக் கல்வி அலுவலா் இ. மாதவன்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:07 am IST

தஞ்சாவூரில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

தமிழகத்திலுள்ள பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, தஞ்சாவூா் மேம்பாலம் அரசு பள்ளியிலிருந்து தஞ்சாவூா் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட தஞ்சாவூா் நகரம், ஊரகம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், மதுக்கூா், பேராவூரணி, திருவோணம், பூதலூா் ஆகிய 9 வட்டாரங்களிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு லாரிகளில் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இப்பணி சில நாட்களில் முடிவடையும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

இப்பணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஜெ. பேபி பாா்வையிட்டாா். அப்போது மாவட்டக் கல்வி அலுவலா் இ. மாதவன் உடனிருந்தாா்.

இதேபோல் கும்பகோணம் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட 6 வட்டாரங்களுக்கு உள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முதல் பருவ பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.