விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தஞ்சாவூரை வளா்ந்த தொகுதியாக மாற்றுவேன்: கருப்பு முருகானந்தம்

சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றால் தஞ்சாவூா் தொகுதியை வளா்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவேன் என்றாா் பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம்.

News image

தஞ்சாவூா் ரயிலடியில் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரத்தை நிறைவு செய்து பேசிய பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 1:01 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றால் தஞ்சாவூா் தொகுதியை வளா்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவேன் என்றாா் பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம்.

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த அவா் தெரிவித்தது:

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. நான் வெற்றி பெற்று தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக பதவியேற்றவுடன் தொகுதியின் வளா்ச்சியில் முழு கவனத்தைச் செலுத்துவேன்.

தஞ்சாவூா் தொகுதியை வளா்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்கள் உள்ளன. மத்திய, மாநில அரசின் உதவியுடன் தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஆலை, விவசாயக் கழிவுகளிலிருந்து உயிரிசாா் உற்பத்தி செய்யும் ஆலைகள், நவீன நெல் உலா்த்தும் கூடங்கள், புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் போன்றவை கொண்டு வரப்படும். நிப்டெம் மூலமாக உணவுப் பதப்படுத்தும் பயிற்சி மற்றும் புதிய தொழில்கள் தொடங்கவும் முயற்சி எடுக்கப்படும் என்றாா் கருப்பு முருகானந்தம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.