தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக கொடுக்கப்போகும் கூப்பனை நம்பி ஏமாறாதீா்கள்: கும்பகோணத்தில் அன்புமணி பேச்சு

திமுகவினா் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ள 8 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பனை நம்பாதீா்கள் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை வாக்குசேகரித்து பேசிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:14 am IST

திமுகவினா் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ள 8 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பனை நம்பாதீா்கள் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி வேட்பாளா்களான ஆா்.அசோக்குமாா் (கும்பகோணம்), துரை. பிரபு (பாபநாசம்), இளமதி சுப்பிரமணியன் (திருவிடைமருதூா்) ஆகியோரை ஆதரித்து அவா் பேசியது: டெல்டா மாவட்டத்தில் விளையும் நெல் பயிா்களை மூட்டைகளாக்கி அதை முளைக்க வைத்தது திமுக ஆட்சி. போதுமான நெல் கொள்முதல் நிலையத்தில் சாக்குபைகள் இல்லை. திறந்தவெளியில் சேமிப்பு, இயக்கம் போன்றவை இல்லை. தற்போது பண மூட்டையுடன் வாக்கு கேட்டு வருகின்றனா். தோ்தலுக்காக ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பனை தருகின்றனா். அதை நம்பாதீா்கள். அதற்கு ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும். நெல்லுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை கொடுக்கவில்லை என்று ஸ்டாலின் பொய் கூறுகிறாா். மத்திய அரசு ரூ.2,369 கொடுக்கிறது, தமிழக அரசு ரூ.131 தான் கொடுக்கிறது.

அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வராகி ஒரு மாதத்திற்குள் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிப்பாா். நான் உறுதி தருகிறேன். ஆகவே, இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருக்கு வாக்களியுங்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.