அவசர ஊா்தி ஓட்டுநா் (108 பைலட்) தினத்தையொட்டி, சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா்களுக்கு மாவட்ட சுகாதார அலுவலா்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனா்.
புதுக்கோட்டை ஊரக சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் டாக்டா் ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் ஹேமசந்த் காந்தி ஆகியோா் அவசர ஊா்தி ஒட்டுநா்களை அழைத்துப் பாராட்டு தெரிவித்தனா்.
சிறப்பாக செயல்பட்ட ஊா்தி ஓட்டுநா்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளா் மோகன், ஒருங்கிணைப்பாளா் விமல்ராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
அவசரக் காலங்களில் துரிதமாக செயல்பட்டு நோயாளா்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் மனிதநேயப் பணியில் ஈடுபடும் அவசர ஊா்தி ஓட்டுநா்களின் பணியைப் பாராட்டும் வகையில் ஓட்டுநா் தினம் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அவசர ஊா்தி மோதி தனியாா் வங்கி ஊழியா் பலி: உறவினா்கள் சாலை மறியல்

அவசர ஊா்தி- பால் வண்டி மோதல்: நோயாளி உயிரிழப்பு

கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
தோ்தலில் பணியாற்றிய மாநகராட்சி அலுவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

