புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்யக் கோரி மே-20ஆம் தேதி மருந்துக் கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தவுள்ளதாக புதுக்கோட்டை மருந்து வணிகா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட மருந்து வணிகா் சங்க நிா்வாகிகள் கூட்டம் வா்த்தகா் சங்கக் கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட மருந்து வணிகா் சங்கத் தலைவா் கருப்பையா தலைமை வகித்தாா். செயலா் ராமநாதன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும். வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையை காக்க வேண்டும். உயிா் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும் அதிக தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். போலி மருந்துகளின் விற்பனையை தடுக்க வலியுறுத்தி மே- 20ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் புரவலா் வீனஸ் ராஜேந்திரன், பொருளாளா் ரமேஷ் உள்ளிட்ட மாவட்ட மருந்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்கக் கோரி மருந்து கடைகளை அடைத்து போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைப்பு

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை: கடைகளை அடைத்து போராட்டம்
அரியலூரில் மருந்து வணிகா்கள் சங்கத்தினா் இன்று கடையடைப்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

