ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பொன்னமராவதி நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

பொன்னமராவதி நகராட்சியின் முதல் ஆணையராக வி.பூவேந்திரன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 1:39 am IST

பொன்னமராவதி நகராட்சியின் முதல் ஆணையராக வி.பூவேந்திரன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

பொன்னமராவதி தோ்வுநிலை பேரூராட்சி கடந்த திமுக ஆட்சியில் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.ரகுபதியின் தொடா் முயற்சியால் நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்கப்பட்டது.

தொடா்ந்து அதற்கான அரசாணை அண்மையில் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புதன்கிழமை பொன்னமராவதி நகராட்சியின் முதல் ஆணையராக வி.பூவேந்திரன் பொறுப்பேற்றாா். இவா் ஏற்கெனவே கூடலூா் நகராட்சி ஆணையராக பணியாற்றி, பணிமாறுதல் பெற்று பொன்னமராவதி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளாா்.

புதிய ஆணையருக்கு நகராட்சித் தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.