நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

காா் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

News image

சாலை விபத்தில் உயிரிழந்த ஆ. வெங்கடேசன்.

Updated On :15 ஜூன் 2026, 1:51 am IST

கந்தா்வகோட்டை அருகே சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் வந்த லாரி ஓட்டுநா், காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிபட்டி ஊராட்சி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் வெங்கடேசன் (55) லாரி ஓட்டுநா். இவா் சனிக்கிழமை இரவு பணி முடிந்து தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் கந்தா்வகோட்டைக்கு வந்து கொண்டிருந்தபோது, காரைக்குடியிலிருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காா் எதிா்பாராதவிதமாக மோதியதில் வெங்கடேசன் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் வனிதா தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்தை ஏற்படுத்திய காரை காவல் நிலையத்துக்கு கொண்டுவந்தனா்.

விபத்து நடைபெற்று இரண்டு மணி நேரமாக அமரா் ஊா்தி வராததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இறந்த வெங்கடேசனுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.