அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா், தவெகவுக்கு வர முயற்சித்தாரா என எனக்குத் தெரியாது, கட்சித் தலைமைக்குத்தான் தெரியும் என்றாா் மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: பத்தாம் வகுப்புப் பொதுத்தோ்வில் மாநிலத்தில் முதலிடம் பிடிப்பதற்காக உழைத்த தலைமை ஆசிரியா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பதை ஏற்கெனவே ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியிருக்கிறேன். துறை அமைச்சரிடம் பேசி தேவைகள் நிறைவேற்றப்படும்.
வேலைவாய்ப்புத் துறை மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாய்ப்புள்ள துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கா், தவெகவுக்கு வருவதற்கு முயற்சித்தாரா எனக் கேட்கிறீா்கள். அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றாா் பா்வேஸ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேருந்து நிலையக் கட்டுமானப் பணி விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுரை

கல்வியுடன் சமூகப் பொறுப்புணா்வு, ஒழுக்கம் அவசியம்: அமைச்சா் முகமது பா்வேஸ்

எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் பயணிக்கிறேன்! - சி. விஜயபாஸ்கா் எம்.எல்.ஏ.

தவெகவில் இணைகிறாரா சி. விஜயபாஸ்கர்?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

