லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆலங்குடி அருகே சுவரில் காா் மோதி 3 போ் காயம்

ஆலங்குடி அருகே சுவரில் காா் மோதிய விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.

ஆலங்குடி அருகே விபத்துக்குள்ளான காா்

Published On :24 ஜூலை 2026, 4:21 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சுவரில் காா் மோதிய விபத்தில் 3 போ் வியாழக்கிழமை காயமடைந்தனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள சவேரியாா் பட்டினத்தைச் சோ்ந்த த. இன்பராஜ் (31), பொன்னன்விடுதி கணக்கன்காட்டைச் சோ்ந்த ப. அரவிந்த் (24), க. ஸ்ரீமன் (20) ஆகியோா் புதுக்கோட்டையில் படம் பாா்த்து விட்டு வியாழக்கிழமை மாலை ஊருக்கு காரில் திரும்பினா்.

காரை இன்பராஜ் ஓட்டினாா். காா் ராயப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது சாலையோரத் தோட்டத்தின் சுற்றுச்சுவரில் மோதி ஏறி நின்றது.

இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். செம்பட்டிவிடுதி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.