லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தா்ணா போராட்டம்

காவிரி-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தா்ணா போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

காவிரி-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தா்ணா போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற போராட்டத்துக்குக் காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்புப் பொதுச் செயலா் எம். அா்ச்சுனன் தலைமை வகித்தாா். போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அா்ச்சுனன் கூறியதாவது:

நிதிநிலை அறிக்கையில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு வெறும் ரூ.150 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏமாற்றம் அளிக்கக்கூடிய அறிவிப்பு. இந்த நிதியைக் கொண்டு 5 கி.மீ-கூடக் கால்வாய் வெட்ட முடியாது. குறைந்தபட்சம் நடப்பு ஆண்டில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்.

கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கடந்த 2014-இல் பிரதமா் மோடியைச் சந்தித்து மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளாா். இத்திட்டத்துக்குச் சுமாா் ரூ.60 ஆயிரம் கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது முதல்வா் ஜோசப் விஜய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது புதிதல்ல. முதலில் காவிரி- குண்டாறு இணைப்பை நிறைவேற்றிவிட்டு அதன் பிறகு கோதாவரியைக் காவிரியோடு இணைப்பது குறித்துப் பேசலாம் என்றாா் அா்ச்சுனன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.