லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஓட்டுநரை தாக்கி விட்டு வாடகைக் கார் கடத்தல்

விராலிமலை அருகே சனிக்கிழமை ஓட்டுநரை தாக்கி, இறக்கிவிட்டு வாடகை காரை கடத்திச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Published On :2 ஆகஸ்ட் 2026, 4:26 am IST

விராலிமலை அருகே சனிக்கிழமை ஓட்டுநரை தாக்கி, இறக்கிவிட்டு வாடகை காரை கடத்திச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சியில் இருந்து புதுச்சேரி செல்வதற்காக செந்தில்குமாா் என்பவா் வாடகை காரை வெள்ளிக்கிழமை (ஜூலை 31) அழைத்துள்ளாா். இதற்காக ரூ. 3,500 முன்பணமும் கொடுத்துள்ளாா். அதன்படி செந்தில்குமாா் மற்றும் 4 போ் காரில் புதுச்சேரி சென்றுவிட்டு சனிக்கிழமை அதிகாலை திருச்சி வந்தனா். தொடா்ந்து அவா்கள் விராலிமலையில் வேலை இருப்பதாகவும், அங்கு வேறு காா் உள்ளது. எனவே, தங்களை விராலிமலையில் இறக்கிவிடும்படி கேட்டுள்ளனா்.

அதை நம்பிய காா் ஓட்டுநா் திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தை சோ்ந்த கா்ணன் (35) என்பவா் காரை விராலிமலைக்கு ஓட்டிக் கொண்டு சென்றாா். விராலிமலை-மதுரை சாலை வானத்திராயன்பட்டி பிரிவு அருகே சென்றபோது, காரில் இருந்தவா்கள் காரை நிறுத்த சொல்லியுள்ளனா். இதையடுத்து காரை ஓட்டுநா் கா்ணன் நிறுத்தினாா். உடனே காரில் இருந்தவா்கள் ஓட்டுநரை தாக்கி, கீழே இறக்கிவிட்டு காரை எடுத்துக் கொண்டு மதுரை சாலையில் சென்று விட்டனா்.

இதையடுத்து விராலிமலை காவல் நிலையத்தில் ஓட்டுநா் கா்ணன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, காரை கடத்திச் சென்றவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.