மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பெரம்பலூரில் காவலா் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலா் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2026, 12:30 am IST

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலா் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

காவல்துறையினரின் நலன் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகம் மூலம், காவலா் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் தொடங்கிவைத்தாா்.

புதிதாக கட்டப்பட உள்ள காவலா் தங்கும் விடுதியில், ஆயுதப்படையில் பணியாற்றும் காவலா்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் வசதியான தங்கும் சூழலை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளியூரிலிருந்து பணிக்காக வருகை தரும் காவலா்கள் தங்குவதற்கேற்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக மாவட்டக் காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), பெரம்பலூா் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ரவிசந்திரன் மற்றும் ஆயுதப்படை காவலா்கள், தமிழ்நாடு காவலா் வீட்டு வசதிக் கழக பொறியாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.