பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலா் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
காவல்துறையினரின் நலன் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகம் மூலம், காவலா் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் தொடங்கிவைத்தாா்.
புதிதாக கட்டப்பட உள்ள காவலா் தங்கும் விடுதியில், ஆயுதப்படையில் பணியாற்றும் காவலா்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் வசதியான தங்கும் சூழலை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளியூரிலிருந்து பணிக்காக வருகை தரும் காவலா்கள் தங்குவதற்கேற்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக மாவட்டக் காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), பெரம்பலூா் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ரவிசந்திரன் மற்றும் ஆயுதப்படை காவலா்கள், தமிழ்நாடு காவலா் வீட்டு வசதிக் கழக பொறியாளா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகைக்கு வந்த நடிகா் ரஜினிகாந்த்

காசி மடத்தில் குமரகுருபரா் சுவாமிகள் குருபூஜை

போக்ஸோ, குற்றவியல் வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியோருக்கு பாராட்டு

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

