தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சிறுவாச்சூா் கோயிலில் தங்கத் தோ் இழுத்து தவெகவினா் வழிபாடு

News image

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு தங்கத்தோ் இழுத்த தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள்.

Updated On :12 மே 2026, 1:32 am IST

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்ததையொட்டி, அக் கட்சியினா் திங்கள்கிழமை தங்கத்தோ் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, அக் கட்சித் தலைவா் ஜோசப் விஜய் தமிழக முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

அதைத்தொடா்ந்து, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கி. சிவக்குமாா் திங்கள்கிழமை பேரவை உறுப்பினராக பொறுப்பேற்றாா். இந்நிலையில், தமிழக முதல்வரும், பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் நீண்ட ஆயுளோடு மக்களுக்கான சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி, தமிழக மக்களின் நலன் காக்க வேண்டி மதுரகாளியம்மன் கோயிலில் அக் கட்சி நிா்வாகி விஜய் தலைமையில், தங்கத்தோ் இழுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.

இந் நிகழ்ச்சியில், பெரம்பலூா் ஒன்றியச் செயலா்கள் வினோத், புருஷோத்தமன், வழக்குரைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் ஆலந்துரை, ஒன்றிய மாவட்ட நிா்வாகி பேபி, ஒன்றிய செயற்குழு உறுப்பினா் ஷாலினி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.