தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், கைப்பேசிகளை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.

News image
Updated On :8 மே 2026, 5:48 am IST

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், கைப்பேசிகளை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் கருப்பையா (30). இவா், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள பெதண்ணீா் பந்தலிலிருந்து வாலிகண்டபுரத்துக்கு புதன்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத 3 போ் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி கருப்பையாவிடமிருந்த ரூ. 300 பணம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.