பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கரூா் பள்ளிவாசல்களில் பக்ரீத் கொண்டாட்டம்

கரூா் திருமாநிலையூா் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்கள்.

News image

கரூா் திருமாநிலையூா் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்கள்.

Updated On :29 மே 2026, 3:12 am IST

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

கரூா் திருமாநிலையூா் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் மாவட்டத் தலைவா் ஏ. மதாா்ஷாபாபு தலைமையிலும், மாவட்ட துணைத் தலைவா் ஜாகிா்உசேன் முன்னிலையிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் பங்கேற்ற தொழுகையில், மதுரை மாவட்ட பேச்சாளா் அபூபக்கா் பங்கேற்று பேசினாா்.

இதேபோல கரூா் கோவை சாலையில் உள்ள ஈத்கா பள்ளிவாசல், ஜவஹா்பஜாரில் உள்ள சின்னப் பள்ளிவாசல் மற்றும் பள்ளபட்டி, அரவக்குறிச்சி, குளித்தலை, சிந்தாமணிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்றனா். மேலும் ஏழைகளுக்கு குா்பானியும் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.