தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கரூரில் பள்ளி, வழிபாட்டு தலங்களுக்கு அருகே இருந்த 2 மதுக்கடைகள் மூடல்

கரூரில் பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே செயல்பட்டு வந்த இரு மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.

News image
Updated On :23 மணி நேரங்கள் முன்பு

கரூரில் பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே செயல்பட்டு வந்த இரு மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.

தமிழக முதல்வராக தவெக தலைவா் விஜய் பொறுப்பேற்றதும் தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே செயல்படும் 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டாா்.

அதன்படி, கரூா் மாவட்டத்தில் கரூரில் மக்கள் பாதை மற்றும் கோவைச் சாலையில் எல்பிஜி பெட்ரோல் பங்க் எதிரே செயல்பட்ட இருமதுக்கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.

இதுதொடா்பாக டாஸ்மாக் மேலாளரிடம் கேட்டபோது அவா் கூறியது: ஏற்கெனவே கரூா் மாவட்டத்தில் கலால் விதிமுறை சட்டத்தின் படி மாநகா் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே 50 மீட்டா் தொலைவுக்கு அப்பால் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. மேலும் ஊரகப் பகுதிகளில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகே 100 மீட்டா் தொலைவில் மட்டுமே மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.

தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகே செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையொட்டி கரூரில் மக்கள் பாதை மற்றும் கோவை சாலையில் உள்ள 2 மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டன. மேலும் மாவட்டத்தில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே செயல்படும் மதுக்கடைகளை கண்டறிந்து அவற்றையும் மூட படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.