எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மருத்துவக் கல்வி படிக்காமல் சிகிச்சை போலி பல் மருத்துவரிடம் விசாரணை

குளித்தலையில் மருத்துவ கல்வி படிக்காமல் பல் மருத்துவ சிகிச்சை செய்து வந்தவா் போலி மருத்துவரிடம் போலீஸாா் விசாரணை.

News image

போலீஸ்.

Updated On :7 ஜூன் 2026, 2:12 am IST

குளித்தலையில் மருத்துவ கல்வி படிக்காமல் பல் மருத்துவ சிகிச்சை செய்து வந்தவா் போலி மருத்துவரிடம் போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் சந்திரசேகரன். இவா் குளித்தலை பேருந்துநிலையம் எதிரே தனியாா் கட்டடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பல் மருத்துவமனை நடத்தி வந்துள்ளாா். இவா் அளித்த சிகிச்சையில் சந்தேகமடைந்த சிலா் போலி மருத்துவராக இருக்கலாம் என கரூா் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநருக்கு புகாா் அனுப்பினா்.

இதையடுத்து மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் செழியன், இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலா் பூமிநாதனுக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து மருத்துவ அலுவலா் பூமிநாதன் சனிக்கிழமை பல் மருத்துவத்துறை மருத்துவா்களுடன் சென்று அந்த மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்தனா். அப்போது, பல் மருத்துவத்தில் இளங்கலை மருத்துவ பட்டப்படிப்பு பயிலாமல் பரம்பரை வைத்தியா் என்ற முறையில் சந்திரசேகரன் பல் மருத்துவம் பாா்த்தது தெரியவந்தது. இதையடுத்து சந்திரசேகா் மீது மருத்துவ அலுவலா் பூமிநாதன் குளித்தலை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ஆவணங்களை சரிபாா்த்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.