தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரியலூா் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருள்கள் போதுமான அளவில் கையிருப்பு! - ஆட்சியா் தகவல்

News image

பெட்ரோல்! - கோப்புப் படம்

Updated On :16 மார்ச் 2026, 12:41 am IST

அரியலூா் மாவட்டத்தில், பெட்ரோலிய பொருள்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில், பெட்ரோல், டீசல் தட்டுபாடு ஏற்படக்கூடும் என்ற வதந்தியின் காரணமாக பெட்ரோலியப் பொருள்கள் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படும் சில்லறை விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது.

ஆனால், அரியலூா் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருள்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாலும், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் சீராக இருப்பதாலும் எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடா்ந்து திறந்து இருக்கும். மேலும், வழக்கம்போல் செயல்படும். எனவே, பொதுமக்கள் அச்சத்தில் பெட்ரோல், டீசலை வாங்க ஒரே நேரத்தில் குவிய வேண்டாம்.

அதேபோல், பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள் அங்கீகரிக்கப்படாத பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.