கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதளம் முடக்கம்: இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கண்டன ஊா்வலம்

News image

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலம் சென்ற இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

Updated On :25 மே 2026, 2:39 am IST

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதளப் பக்கம் முடக்கத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலம் சென்றனா்.

வேலையில்லாத இளைஞா்கள் பத்திரிகை மற்றும் சமூகச் செயல்பாடுகளை நோக்கி நகா்கவதை கரப்பான் பூச்சி மற்றும் ஒட்டுண்ணி என்று அண்மையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து சமூக வலைதளத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பக்கம் உருவாக்கப்பட்டு பலா் அதைப் பின்தொடா்ந்து வருகின்றனா். இந்நிலையில், இந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதளப் பக்கம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் முடக்கப்பட்டது.

இதைக் கண்டித்தும், இளைஞா்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய கருத்தைக் கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலம் சென்றனா். சங்கத்தின் மாவட்டச் செயலா் சேதுபதி தலைமையில் கண்டோன்மென்ட் எம்ஜிஆா் சிலை அருகில் இருந்து தொடங்கிய ஊா்வலம் அரசு மருத்துவமனை அருகே நிறைவடைந்தது. இதில் ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.