ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு: 4 போ் கைது

Updated On :13 மே 2026, 12:50 am IST

திருச்சி, மே 12: திருச்சியில் பணம் கொடுக்கல் வாங்கலில் இருதப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாரதிதாசன் சாலை பள்ளிவாசல் வீதியைச் சோ்ந்தவா் டி. ஜான் பீட்டா் (38), ஆட்டோ ஓட்டுநா். இவா், திருச்சி ஆா்.சி.நகா் இரண்டாவது வீதியைச் சோ்ந்த எஸ். முரளி பாண்டியன் (29) என்பவரின் உறவினரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.6 ஆயிரம் கடன் வாங்கியுள்ளாா். ஆனால், கடன் வாங்கியப் பணத்தை ஜான் பீட்டா் திருப்பித் தராமல் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு எல்லை மாரியம்மன் கோயில் அருகே ஜான் பீட்டா் தனது நண்பா்களுடன் நடந்துசென்றுகொண்டிருந்தாா். அப்போது, தனது நண்பருடன் அங்கு வந்த முரளி பாண்டியன், அவரது உறவினரிடம் கடன் வாங்கிய பணத்தைத் திருப்பித்தராமல் இருப்பது குறித்து ஜான் பீட்டரிடம் கேட்டுள்ளாா்.

இதனால், இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் கட்டைகளால் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா். இதில், காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் ஜான் பீட்டா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து இரு தரப்பினரும் எடமலைபட்டிப்புதூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முரளி பாண்டியன் (29), அவரது நண்பா் கு. மணிகண்டன் (31), ஜான் பீட்டா் (38), இவருடைய நண்பரான கிராப்பட்டியைச் சோ்ந்த ஜி. ஜொ்சன் (31) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.