திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற கட்டடத் தொழிலாளி காா் மோதி உயிரிழந்தாா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் சேசலூா் முத்தமடைப்பட்டியை சோ்ந்தவா் துரைக்கண்ணு மகன் சின்னு (53), கட்டடத் தொழிலாளி.
மனைவியை இழந்து தனியாக வாழ்ந்து வந்த இவா், வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை மாலை திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தபோது, திண்டுக்கல்லிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வெள்ளை நிற காா் மோதி படுகாயமடைந்தாா்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், சின்னு உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலையைக் கடக்க முயன்றவா் காா் மோதி உயிரிழப்பு

அந்தியூா் அருகே காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
வையம்பட்டி அருகே கள்ளச் சந்தையில் மது விற்றவா் கைது

வையம்பட்டி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

