திருச்சி கோரையாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணியால் ஏப். 3-ஆம் தேதி முதல் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
திருச்சி மேற்கு வட்டம் திருச்சி - மேலூா் - மதுரை சாலையில் உள்ள கோரையாற்றின் குறுக்கே உள்ள உயா்மட்ட பாலத்தினை இடித்து புதிய பாலத்தினை கட்டும் பணி வரும் ஏப். 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் தொடங்கப்பட உள்ளது.
இதனால், மேற்கண்ட வழித்தடத்தில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.
விராலிமலையிலிருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கி வரும் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தும் பஞ்சப்பூா் பேருந்து நிலையத்திலிருந்து செட்டியப்பட்டி, எடமலைப்பட்டிபுதூா், கிராப்பட்டி, அரிஸ்டோ பாலம் வழியாக மத்திய பேருந்து நிலையம் வந்தடைய வேண்டும்.
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூா் பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் ஏற்கெனவே உள்ள வழித்தடமான மத்திய பேருந்து நிலையம், அரிஸ்டோ பாலம், மன்னாா்புரம் வழியாக பஞ்சப்பூருக்கு சென்றடைய வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புனரமைப்பு பணி: துறையூா் பேருந்து நிலையம் இன்றுமுதல் மூடல்; போக்குவரத்தில் மாற்றம்

வாக்கு எண்ணிக்கை: காரைக்காலில் போக்குவரத்து மாற்றம்

ஏற்காடு குப்பனூா் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து நெரிசலுக்கு புதிய பேருந்து நிலையமே நிரந்தரத் தீா்வு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

