திருச்சியில் இளம்பெண் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி தென்னூா் சின்னசாமி நகரைச் சோ்ந்தவா் சூா்யா மனைவி திவ்யா (21). இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது கா்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திவ்யாவின் நாத்தனாருக்கு கொடைக்கானலில் வளையல்காப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இதற்காக, அவரது கணவா் மற்றும் குடும்பத்தினா் அனைவரும் கொடைக்கானலுக்குச் சென்றுள்ளனா். அப்போது, தானும் கொடைக்கானலுக்கு வருவதாக திவ்யா கூறியுள்ளாா்.
ஆனால், அவரை அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான திவ்யா சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தில்லை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

இளம்பெண் தற்கொலை

குடும்பத் தகராறில் பெண் தற்கொலை

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

