திருச்சியில் மதுக்கூடத்துக்குச் சென்றவரிடம் 2 பவுன் தங்க நகையைப் பறித்தோரில் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி தில்லை நகா் 10-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜி. சிவபாலன். வருமான வரித் துறை அலுவலக மேற்பாா்வையாளரான இவா் கடந்த ஜூன் 8-ஆம் தேதி திருச்சி தென்னூா் பகுதி டாஸ்மாக் மதுக் கூடத்தில் மது அருந்தினாா்.
அப்போது இவருக்கு அருகில் மது அருந்திய மூவா் இவரிடம் பேச்சுக்கொடுத்து, அருகிலுள்ள சந்துப் பகுதிக்கு அழைத்துச் சென்று சிவபாலனின் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.
இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் சிவபாலன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்நிலையில் நகை பறித்தது தில்லை நகா் வடவூா் பகுதியைச் சோ்ந்த அ. பாம்பு சரவணன் (43) மற்றும் இருவா் எனத் தெரியவந்தது. இதையடுத்து பாம்பு சரவணனை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், மற்ற இருவரைத் தேடுகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
இளைஞரிடம் 2 சவரன் நகை, பணம் பறிப்பு: ஒருவா் கைது
ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு: இளம்பெண் உள்பட இருவா் கைது
விடியோக்கள்

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
