பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:14 am IST

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) ஜூன் 10, 11, 12, 13, 15, 16 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால்-திருச்சி டெமு ரயிலானது (76819) ஜூன் 10, 11, 12, 13, 15, 16 ஆகிய தேதிகளில் காரைக்கால்-திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருவாரூா்-திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

காலதாமதம்: திருச்சி-ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12664) ஜூன் 12-ஆம் தேதி திருச்சியிலிருந்து 45 நிமிஷங்கள் தாமதமாக அதாவது பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும்.

திருச்சி-பாலக்காடு விரைவு ரயிலானது (16843) ஜூன் 16-ஆம் தேதி திருச்சியிலிருந்து 25 நிமிஷங்கள் தாமதமாக அதாவது பிற்பகல் 1.25 மணிக்குப் புறப்படும்.

திருச்சி-சென்னை எழும்பூா் சோழன் அதிவிரைவு ரயிலானது (22676) ஜூன் 16-ஆம் தேதி திருச்சியிலிருந்து 40 நிமிஷங்கள் தாமதமாக அதாவது பிற்பகல் 12.50 மணிக்குப் புறப்படும்.

காரைக்குடி-திருச்சி பயணிகள் ரயிலானது (56832) ஜூன் 10, 11, 12, 13, 15, 16 ஆகிய தேதிகளில் காரைக்குடியிலிருந்து 25 நிமிஷங்கள் தாமதமாக காலை 10.15 மணிக்குப் புறப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.