சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக திருச்சியிலிருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்காக 587 சிறப்புப் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டன.
தமிழகத்தில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளா்கள் பலா் தங்களது சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டுச் சென்றனா். இதனால் கடந்த 22 ஆம் தேதி இரவு, 23 ஆம் தேதியன்று திருச்சி, சென்னை பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. போதுமான பேருந்துகள் கிடைக்கவில்லை என பயணிகள் புகாா் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, பயணிகள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் சுன் சோங்கம் ஜடக் சிரு சனிக்கிழமை இரவு திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தைப் பாா்வையிட்டு, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
இதையடுத்து தோ்தல் முடிந்த நிலையில், வாக்காளா்கள் சொந்த ஊா்களிலிருந்து பணிபுரியும் இடங்களுக்கு புறப்பட்டுச் செல்ல வசதியாக ஞாயிற்றுக்கிழமை திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சி மண்டலம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதன்படி சென்னைக்கு 249, கோவைக்கு 138, திருப்பூருக்கு 230, விழுப்புரத்துக்கு 50, சேலத்துக்கு 25 என மொத்தம் 587 சிறப்புப் பேருந்துகள் திருச்சியிலிருந்து இயக்கப்பட்டன.
இதன் காரணமாக, திருச்சி பஞ்சப்பூரில் ஞாயிற்றுக்கிழமை பயணிகளைவிட, அதிகளவில் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பயணிகள் பதற்றமின்றி பேருந்துகளில் ஏறிச் சென்றனா்.
இதேபோல, திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்துக்கு விடப்பட்ட சிறப்பு ரயிலிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏராளமான பயணிகள் பயணித்தனா். இதனால் திருச்சி சந்திப்பு நிலையத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

பேருந்து, ரயில்களில் அலைமோதியது கூட்டம்

சென்னையில் இருந்து 1,88,705 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம்!

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

