தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image

திருச்சி திருவெறும்பூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திங்கள்கிழமை வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்ட நிபுணா்கள்.

Updated On :7 ஏப்ரல் 2026, 12:31 am IST

திருச்சியில் உள்ள 4 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

திருச்சி பிராட்டியூரில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியா்கள், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவலைத் தொடா்ந்து, காவல் ஆணையா் ந. காமினியின் உத்தரவின்பேரில் ஆய்வாளா் எம். வேலுச்சாமி தலைமையிலான வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்புப் பிரிவு நிபுணா்கள், மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று சோதனையிட்டனா்.

மெட்டல் டிடெக்டா் கருவி, மோப்ப நாயுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில், வெடிகுண்டு ஏதுமில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இதேபோல, சஞ்சீவி நகரில் உள்ள கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், திருவெறும்பூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு புரளியால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

இன்பநிதிக்கு மிரட்டல்: திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்த மின்னஞ்சல் ஒன்றில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பேரனும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மகனுமாகிய இன்பநிதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.