தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 1:33 am IST

திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மூன்று பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் அரியமங்கலம் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, எஸ்ஐடி மைதானம் அருகே சந்தேகப்படும் வகையில் மூன்று போ் நின்றுகொண்டிருந்தனா். போலீஸாா் அவா்களைப் பிடிக்க முயன்றபோது ஒருவா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். மற்ற இருவரையும் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

இதில், அவா்கள் , அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியைச் சோ்ந்த மு. பாலமுருகன் (36), புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியைச் சோ்ந்த ஆ.சண்முகப்பிரியன் (34), தப்பியோடியவா் அரியமங்கலத்தை சோ்ந்த அரியமங்கலம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த அ.ஷாகுல் ஹமீது ஆகியோா் என்பதும், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 2.5 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ.2 ஆயிரம் ரொக்கம், ஒரு இருக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிவரைத் தேடி வருகின்றனா்.

இதேபோல, நீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொன் நகா் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த ஆா். பாா்த்திபன் (31) என்பவரை நீதிமன்றப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.