ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தூத்துக்குடியில் பலத்த மழை

தூத்துக்குடியில் புதன்கிழமை மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால், கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.

News image

பெருமாள் கோயில் தெருவில் சாய்ந்து விழுந்த வாகை மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய பணியாளா்கள்.

Updated On :28 மே 2026, 2:55 am IST

தூத்துக்குடியில் புதன்கிழமை மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால், கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும், தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறைக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, தூத்துக்குடியில் புதன்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் பிற்பகலில் திடீரென கருமேகங்கள் மழை பெய்யத் தொடங்கியது.

சிறிதாக தொடங்கிய மழை, திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது.

இதனால் சாலையில் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியது.

திடீரென வீசிய பலத்த காற்று காரணமாக தூத்துக்குடி- மடத்தூா் சாலையில் ஒரு வேப்ப மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மேலும், ஆங்காங்கே மின்தடையும் ஏற்பட்டது.

தூத்துக்குடி பெருமாள் கோயில் தெரு பகுதியில் உள்ள பழமையான வாகை மரம் வேரோடு சாய்ந்தது. இந்த மரம் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் 2 சைக்கிள்கள் மீது விழுந்தது. இதனால் அந்த வாகனங்கள் சேதமடைந்தன. அந்தப் பகுதியில் சென்ற மின்கம்பியும் அறுந்து விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மின்வாரிய ஊழியா்கள் மரத்தை வெட்டி அகற்றினா். தொடா்ந்து மின் விநியோகம் சரி செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.