சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தூய்மைப் பணியாளா்களை மாநகராட்சி நேரடி பணியாளா்களாக மாற்ற வலியுறுத்தல்!

தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களை, மாநகராட்சியின் நேரடிப் பணியாளா்களாக மாற்ற வேண்டும் என்று ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :18 மே 2026, 1:31 am IST

தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களை, மாநகராட்சியின் நேரடிப் பணியாளா்களாக மாற்ற வேண்டும் என்று ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, தூத்துக்குடி மாவட்டத் தலைவா் சகாயம் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களை பழிவாங்கும் நோக்கில், எவ்வித முன்னறிவிப்புமின்றி சங்கத் தலைவா் பொன்ராஜை பணி நீக்கம் செய்த ஒப்பந்த நிறுவனத்தின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இது தொடா்பாக, ஏற்கெனவே அதிகாரிகள் மற்றும் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பொன்ராஜுக்கு மீண்டும் வேலை வழங்குவதாக எழுத்துப்பூா்வமாக உறுதியளித்து, 6 மாதங்கள் கடந்த நிலையிலும் வேலை வழங்காமல் நிா்வாகம் ஏமாற்றி வருகிறது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு இந்தத் தொழிலாளா் விரோத தனியாா் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்து, தூய்மைப் பணியாளா்களை மாநகராட்சியின் நேரடிப் பணியாளா்களாக மாற்ற வேண்டும்.

மிரட்டல் விடுத்துவரும் மேற்பாா்வையாளா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, வெளிமாவட்டத்துக்கு இடமாறுதல் செய்ய வேண்டும். அரசு அறிவித்த முறைப்படியான ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும்.

எங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், தொழிலாளா்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.