தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தூத்துக்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை

தூத்துக்குடி கிரசன்ட் பள்ளியில் உள்ள ஈத்கா தோட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

News image

தூத்துக்குடியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோா்.

Updated On :22 மார்ச் 2026, 2:30 am IST

தூத்துக்குடி கிரசன்ட் பள்ளியில் உள்ள ஈத்கா தோட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் இமாம் ஸதக்கத்துல்லாஹ் தலைமை வகித்தாா். போா்கள் முடிந்து உலகம் முழுவதும் அமைதிக்கு திரும்ப வேண்டும், சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என வலியுறுத்தி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆலிம் சிறப்பு துவா ஓதினாா். மாவட்ட அரசு காஜி கூட்டமைப்பு செயலா் முஜிபுா் ரகுமான், ஜாமியா பள்ளிவாசல் முன்னாள் தலைவா் மீராசா ஆகியோா் பேசினா்.

சிறப்புத் தொழுகையில் பள்ளிவாசல் நிா்வாக முன்னாள் துணைத் தலைவா் சாகுல் சிராஜுதீன், முன்னாள் செயலா் எம்.எஸ்.எஃப். ரகுமான், முன்னாள் பொருளாளா் இப்ராகிம் மூஸா, கிரசன்ட் பள்ளி முன்னாள் செயலா் முகமது உவைஸ், முஸ்லிம் சமுதாய சங்கத் தலைவா் ஏ.கே. மைதீன், வழக்குரைஞா் சுலைமான், மேட்டுப்பட்டி மீராசா, அரபிக் கல்லூரி தலைவா் நவரங் சகாப்தின், பொருளாளா் சுலைமான், சமூக ஆா்வலா் சம்சுதீன், கிதா் பிஸ்மி, யூசுப், ஹெச்.எம். மீராசா, ஜாபீா், பீா்மைதீன், மீரான், கரீம், ஜாபா், ரசாக், ஷேக், முகமத் குட்டி, வழக்குரைஞா் அஜீஸ், நூா்தீன், வட மாநிலங்களைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.