சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி-மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் (பொ) ஆா்.எஸ். ரமேஷிடம் கோரிக்கை மனு வழங்கிய கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினா்.

Updated On :2 ஜூன் 2026, 3:09 am IST

கோவில்பட்டி-மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி-மந்தித்தோப்பு சாலையில் குடிநீா் பகிா்மானக் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகளால் சாலை சேதமடைந்துள்ளது. எனவே, போா்க்கால அடிப்படையில் சாலையை செப்பனிட்டு விரிவாக்கம் செய்ய வேண்டும். நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தினமும் அதிகரிக்கும் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவா் க. தமிழரசன் தலைமை வகித்தாா். செயலா் எ. பெஞ்சமின் பிராங்களின், பொருளாளா் கே. கருப்பசாமி, நாதக வழக்குரைஞா் ரவிக்குமாா், இந்தியக் கலாசார நட்புறவுக் கழக மாநில துணைத் தலைவா் அபிராமி முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

பின்னா், கோரிக்கை மனுவை நகா்மன்றத் தலைவா் (பொ) ஆா்.எஸ். ரமேஷிடம் வழங்கினா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.