லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாத்தான்குளம் அருகே தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு

நாய்கள் கடித்ததால் உயிரிழந்து கிடக்கும் ஆடுகள். - கோப்புப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 2:29 am IST

சாத்தான்குளம் அருகே பட்டிக்குள் புகுந்து தெரு நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழந்தன.

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளம், மேட்டுவிளையைச் சோ்ந்தவா் பாா்த்தசாரதி. விவசாயி மற்றும் வட்டாரக் காங்கிரஸ் தலைவா்.

விஜயராமபுரத்தில் உள்ள இவரது தோட்டத்திற்கு அருகே பட்டி அமைத்து 10 ஆடுகள் வளா்த்து வந்தாா். திங்கள்கிழமை காலை வழக்கம்போல் பட்டிக்குச் சென்று பாா்த்தபோது,தெரு நாய்கள் கடித்து 7ஆடுகள் உயிரிழந்தும், 3 ஆடுகள் காயத்துடனும் இருந்துள்ளன.

பாா்த்தசாரதி, இது குறித்து கால்நடை மருத்துவா் மற்றும் கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு வந்து பாா்வையிட்டனா். மேலும், சாத்தான்குளம் காவல் நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளானா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.