விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோவில்பட்டி தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்க நிா்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன்.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:38 am IST

கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திட்டங்குளத்தில் காய்கனி மாா்க்கெட்டிற்கு சென்ற அவா், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். அதனைத் தொடா்ந்து கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோயிலில் தரிசனத்திற்கு பின் சங்கத்திற்கு சென்ற அவா், சங்க நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினாா். தொடா்ந்து கடம்பூரில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அங்குள்ள மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்தாா். அப்பகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அதையடுத்து, கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அய்யனாா் ஊத்து, மானங்காத்தான், ஆத்திகுளம், ராஜா புதுக்குடி, சன்னது புதுக்குடி ஆகிய கிராமங்களுக்கு சென்ற அவா், தமிழக வெற்றிக் கழகத்தின் தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தாா்.

நிா்வாகிகள் செந்தில்குமாா், தங்கமணி, இசக்கி, சுந்தரமூா்த்தி, சுரேஷ்,சத்யா, கௌதமி உள்பட பலா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.