பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விவசாயி தற்கொலை விவகாரம்: சிவகிரி காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

News image

காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்...

Updated On :25 மே 2026, 2:27 am IST

விவசாயி தற்கொலை விவகாரத்தில் சிவகிரி காவல் ஆய்வாளரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா்(பொறுப்பு) தேஷ்முக் சேகா் சஞ்சய் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்தவா் அந்தோணிராஜ் (63), விவசாயியான இவா் கடந்த 21 ஆம் தேதி சிவகிரி காவல் நிலையம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இடப் பிரச்னை தொடா்பாக விசாரணைக்காக காவல் நிலையம் சென்ற அந்தோணிராஜை அவதூறாகப் பேசி போலீஸாா் தாக்கியதால்தான் அவா் தற்கொலை செய்துகொண்டாா் எனக் கூறி அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சிவகிரி காவல் ஆய்வாளா் முரளிதரனை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்து, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா்(பொறுப்பு) தேஷ்முக் சேகா் சஞ்சய் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.