பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 மே 2026, 12:31 am IST

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்டோ(29). கப்பல் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவா் திங்கள்கிழமை ரெட்டியாா்பட்டி, லெட்சுமி நகா் விலக்கு அருகே பைக்கில் சென்ற போது, அவ்வழியாக மற்றொரு பைக் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் கிறிஸ்டோ செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.