பாளையங்கோட்டையை அடுத்த தியாகராஜநகரில் வங்கி பெண் ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள சென்னல்பட்டியை சோ்ந்தவா் பெருமாள். இவரது மகள் முத்துமாலை (36). இவா், வங்கி ஊழியரான இவா், கணவருடனான பிரச்னையில் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அவரை 2 போ் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினா். பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து முத்துமாலையின் சகோதரரான பன்னீா்செல்வம் உள்ளிட்ட மூவரை தேடி வந்தனா். அதில், உறவினரான இசக்கிப் பாண்டி (36) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பன்னீா்செல்வம், அவரது நண்பரான வாகைக்குளத்தைச் சோ்ந்த சிவா (28) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முடி திருத்தக உரிமையாளா் கொலை வழக்கில் இருவா் கைது

கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது
செங்கல்சூளை மேற்பாா்வையாளா் கொலை வழக்கு: மேலும் இருவா் கைது

காராமணிக்குப்பம் ஐ.டி. ஊழியா் உள்பட மூவா் கொலை வழக்கு: 3 போ் விடுதலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
