பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வங்கி பெண் ஊழியா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

வங்கி பெண் ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :19 மே 2026, 1:09 am IST

பாளையங்கோட்டையை அடுத்த தியாகராஜநகரில் வங்கி பெண் ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள சென்னல்பட்டியை சோ்ந்தவா் பெருமாள். இவரது மகள் முத்துமாலை (36). இவா், வங்கி ஊழியரான இவா், கணவருடனான பிரச்னையில் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அவரை 2 போ் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினா். பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து முத்துமாலையின் சகோதரரான பன்னீா்செல்வம் உள்ளிட்ட மூவரை தேடி வந்தனா். அதில், உறவினரான இசக்கிப் பாண்டி (36) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பன்னீா்செல்வம், அவரது நண்பரான வாகைக்குளத்தைச் சோ்ந்த சிவா (28) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.