தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நெல்லையில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா்

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாநகா், மாவட்டத்தில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

News image

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.

Updated On :8 மே 2026, 5:59 am IST

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாநகா், மாவட்டத்தில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் முடிவுகளின் படி எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் முதல்வராக வியாழக்கிழமை பொறுப்பேற்கலாம் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், ஆளுநா் கோரிக்கையின்படி, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உறுதிப்படுத்தப்படாததால் அது மேலும் ஓரிரு நாள்கள் தள்ளிப்போகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், மாநிலத்தில் எவ்விதமான அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா், மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின் படி, மாவட்டம் மற்றும் மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகரில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கட்சி அலுவலகங்கள், ரயில், பேருந்து நிலையங்கள், தலைவா்களின் சிலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கூடுதல் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.