தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு

திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் இணையவழி குற்ற தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

News image

இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :19 மார்ச் 2026, 1:18 am IST

திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் இணையவழி குற்ற தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

சமூகவலைதள செயலிகள் மூலம் மா்மநபா்கள் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையா்கள் மேற்பாா்வையில் பள்ளி, கல்லூரி போன்ற இடங்களில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மாநகர சைபா் கிரைம் போலீஸாா் பாளையங்கோட்டை சாந்தி நகரில் பொதுமக்களை புதன்கிழமை சந்தித்து இணையவழி குற்றங்கள் மற்றும் அதில் சிக்காமல் தப்பிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்நிகழ்வில், சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாளுதல், சமூக வலைதளம் மூலம் நடைபெறும் வேலைவாய்ப்பு மோசடிகள், ஏ.டி.எம். அட்டைகள் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் பயன்படுத்துதல், அறிமுகமில்லாத நபா்கள் சமூக வலைதளத்தில் தொடா்புகொண்டால் எச்சரிக்கையாக இருப்பது போன்றவை குறித்து பொதுமக்களிடம் விளக்கி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

மேலும், இணையவழி மோசடி தொடா்பாக கட்டணமில்லா எண். 1930 அல்லது இணையதளம் மூலமாக புகாா் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.