விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வணிக எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு: நெல்லையில் ஹோட்டல்களை மூடும் அபாயம்

திருநெல்வேலி மாநகரில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :12 மார்ச் 2026, 1:16 am IST

திருநெல்வேலி மாநகரில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேற்காசிய நாடுகளில் நிலவும் போா்ச் சூழல் காரணமாக இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வீட்டு உபயோக எரிவாயு உருளை பெறுவதற்காக பதிவு செய்வது முடங்கியுள்ள நிலையில், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், பல ஹோட்டல்களில் உணவு வகை குறைக்கப்பட்டுள்ளன. சிறிய ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரிய ஹோட்டல்களும்கூட அடுத்த சில தினங்களில் மூடப்பட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் என ஹோட்டல் உரிமையாளா்கள் கூறுகிறாா்கள்.

இதுதொடா்பாக திருநெல்வேலியில் ஹோட்டல் உரிமையாளா் அலிஃப் பிலால் கூறுகையில், ‘தற்போதைய நிலையில் தனியாா் நிறுவனங்கள் மட்டுமே எரிவாயு உருளை விநியோகம் செய்து வருகின்றன. பெரும்பாலான ஹோட்டல்கள் நவீன சமையல் முறைக்கு வந்துவிட்டதால், திடீரென விறகு அடுப்பிற்கு மாறுவது இயலாதது. சமையலா்களும் விறகு அடுப்பை பயன்படுத்த தயங்கும் நிலை உள்ளது. எனவே, அடுத்த சில தினங்களில் ஹோட்டல்களை மூட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்’ என்றாா்.

தனிப்படை அமைப்பு: சமையல் எரிவாயு உருளைகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவது மற்றும் பதுக்கப்படுவதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.