மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ராதாபுரம் வட்டத்தில் ஜமாபந்தி

திருநல்வெலி மாவட்டம், ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

ஜமாபந்தியில் பயனாளிக்கு பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :18 ஜூன் 2026, 2:42 am IST

திருநல்வெலி மாவட்டம், ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாவட்டம் முழுவதும் 8 வட்டங்களில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், ஆட்சியா் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், 8 பயனாளிகளுக்கு இணையவழிப் பட்டாக்கள், 4 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினாா்.

தனித் துணை ஆட்சியா் ஜெயா, ஆட்சியா் அலுவலக மேலாளா் கிருஷ்ணகுமாா், ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.