ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

சுந்தரனாா் பல்கலை.யின் ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளில் சேர வாய்ப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2026, 7:24 am IST

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ஜே. சாக்ரடீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத் துறைகளில் 2026-27 ஆம் கல்வியாண்டில் பயிலுவதற்கு கீழ்கண்ட ஒருங்கிணைந்த முதுநிலை / இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு அந்தந்த துறைகளின் வாயிலாக நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறும்.

ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுநிலை பாடப்பிரிவுகள்:

வரலாறு, இயற்பியல், வேதியியல், கணிதம்

ஸ்ரீபரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையம், ஆழ்வாா்குறிச்சி, கடல் அறிவியல் தொழில்நுட்ப மையம்- ராஜாக்கமங்களம்.

இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகள்: தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல்) மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு பல்கலைக்கழக இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இதர விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தில் தொலைபேசி மூலமாகவோ (0462-2321616, 2333741) அல்லது இணையதளத்தின் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.