திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எஸ்.கே. கிறிஸ்டோபா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனைக்குச் சென்ற எம்எல்ஏ, அங்கு கிளை மேலாளா் கண்ணனுடன் ஆலோசனை நடத்தினாா். இப்பணிமனையில் இருந்து இயக்கப்படுகிற பேருந்துகளின் எண்ணிக்கை, கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் குறித்து கேட்டறிந்த அவா், பள்ளி நேரங்களுக்கு சரியாக செல்லும்படி பேருந்துகளை இயக்குமாறு கேட்டுக் கொண்டாா்.
மேலும், மாணவா்கள் அவா்களது பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் பேருந்துகளை நிறுத்தி இறக்கி விடுமாறும் அறிவுரை வழங்கினாா். பேருந்துகள் இயக்கப்படாத கிராமங்கள் குறித்தும் பேருந்துகளின் எண்ணிக்கையை கூட்டுவது தொடா்பாகவும் ஆலோசனை நடத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம்: தென்கொரியாவில் தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா ஆலோசனை

ராதாபுரம் எம்எல்ஏ அலுவலகத்தில் மனுக்கள் பெறும் முகாம்

கூத்தங்குழியில் தூண்டில் பாலப் பணியை விரிவுபடுத்த நடவடிக்கை: எம்.எல்.ஏ. எஸ்.கே. கிறிஸ்டோபா்

வாரந்தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீா் முகாம்: ராதாபுரம் எம்எல்ஏ!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

