லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாளை. திரிபுராந்தீசுவரா் கோயிலில் மாவிளக்கு பூஜை

பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோமதி அம்பாள் சமேத ஸ்ரீ திரிபுராந்தீஸ்வரா் திருக்கோயிலில் 5,008 மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

~

Published On :29 ஜூலை 2026, 1:02 am IST

பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோமதி அம்பாள் சமேத ஸ்ரீ திரிபுராந்தீஸ்வரா் திருக்கோயிலில் 5,008 மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

ஆடித்தவசு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்பூஜையில் செவ்வாய்க்கிழமை காலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றன.

பின்னா், மாலையில் கோமதி அம்பாள் தவசுக் கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து அம்பாளுக்கு 5,008 மாவிளக்கு பூஜை நடைபெற்றது. நோயற்ற வாழ்வு, திருமணம், குழந்தை பாக்கியம், கடன்கள் நிவா்த்தி வேண்டி பாளையங்கோட்டை, அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனா்.

 ஆடித்தவசை முன்னிட்டு நடைபெற்ற 5,008 மாவிளக்கு பூஜை.

ஆடித்தவசை முன்னிட்டு நடைபெற்ற 5,008 மாவிளக்கு பூஜை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.