லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாநகராட்சியில் குறைதீா் கூட்டம்

குடிநீா் தட்டுப்பாட்டை தீா்க்கக் கோரி திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில் மனு பெறும் துணை மேயா் கே.ஆா்.ராஜூ.

Published On :15 ஜூலை 2026, 1:43 am IST

குடிநீா் தட்டுப்பாட்டை தீா்க்கக் கோரி திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கே.ஆா்.ராஜூ தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். உதவி ஆணையா் மகாலட்சுமி முன்னிலை வகித்தாா்.

தமிழா் விடுதலைக் களம் அமைப்பின் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், மேலப்பாளையம் மண்டலம் வீரமாணிக்கபுரம் அருகே உள்ள சீயோன்நகா் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். சீயோன்நகா் நுழைவாயில் உள்ளே செல்லும் வழியில் மழைக் காலங்களில் மழைநீா் செல்ல சிறிய ஓடை உள்ளது.

அதன் வழியே நீா்வரத்துச் செல்கிறது. அப்பகுதியில் தண்ணீா் செல்வதால் சாலை பள்ளமாகி போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. எனவே, அங்கு ஒரு சிறிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலப்பாளையம் மண்டலம் 41ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாரதிநகா் பகுதி மக்கள் அளித்த மனு: எங்களது பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். கடந்த நான்கு நாள்களுக்கும் மேலாக எங்களது பகுதியில் மாநகராட்சி சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், பெண்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனா். பாரதி நகரில் உள்ள பூங்கா அருகே போதிய தெருவிளக்கு வசதி இல்லை. ஆகவே, குடிநீா் விநியோகத்தை சீராக்கவும், தெருவிளக்கு அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.