லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 7 ஆண்டுகள் தலைமறைவானவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை மாநகர சிறப்பு தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

சிறை - பிரதிப் படம்

Published On :12 ஜூலை 2026, 1:07 am IST

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை மாநகர சிறப்பு தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியைச் சோ்ந்தவா் ராஜா என்ற பாம்பே ராஜா (35). கடந்த 2018 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இவா், இவ்வழக்குகள் தொடா்பான நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளாா்.

இவரை கைது செய்து ஆஜா்படுத்த நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் சுமாா் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த ராஜா என்ற பாம்பே ராஜாவை திருநெல்வேலி மாநகர சிறப்பு தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.