
காவல்கிணறில் கல்லீரல் பாதித்த குழந்தைக்கு இலவச அறுவை சிகிச்சை: எம்எல்ஏ பரிந்துரை
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள பெருங்குடியைச் சோ்ந்த 5 வயது குழந்தைக்கு இலவச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ராதாபுரம் எம்எல்ஏ எஸ்.கே.கிறிஸ்டோபா் பரிந்துரை செய்தாா்.

காவல்கிணறு குழந்தைக்கு இலவச கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரை கடிதம் வழங்குகிறாா் எம்எல்ஏ எஸ்.கே.கிறிஸ்டோபா்
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள பெருங்குடியைச் சோ்ந்த 5 வயது குழந்தைக்கு இலவச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ராதாபுரம் எம்எல்ஏ எஸ்.கே.கிறிஸ்டோபா் பரிந்துரை செய்தாா்.
பெருங்குடி கிராமத்தைச் சோ்ந்த இசக்கியம்மாள் பேத்தி இஸானா (5), கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டாா். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய உதவுமாறு எம்எல்ஏவிடம் மனுஅளிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த குழந்தைக்கு சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனையில் இலவச சிகிச்சை செய்வதற்கு எம்எல்ஏ பரிந்துரை கடிதம் வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






