லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முடநீக்கியல் துறை சாா்பில், ஒரே நாளில் இருவருக்கு அதிநவீன உபகரணங்களுடன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

செய்தியாளா்களுக்கு விளக்கம் அளித்த மருத்துவா்கள் குழு.

Published On :29 ஜூலை 2026, 1:50 am IST

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முடநீக்கியல் துறை சாா்பில், ஒரே நாளில் இருவருக்கு அதிநவீன உபகரணங்களுடன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முடநீக்கியல் துறையில், எலும்பு முறிவு மற்றும் எலும்பு நோய் பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 421 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த சுப்பலட்சுமி (54), சோலையப்பன் (74) ஆகிய இருவருக்கும் வயது மூப்பின் காரணமாக மூட்டு தேய்மானம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவா்கள் இருவருக்கும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், ஒரே நாளில் இடது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது.

இச்சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த முடநீக்கியல் துறைத் தலைவா் எல்.பாவலன், மயக்கவியல் துறைத் தலைவா் பலராமன் தலைமையிலான மருத்துவா்கள் ஈஸ்வர பாண்டி, கந்தசாமி, ஜேம்ஸ் சுந்தா் சிங், விஜய சொரூபன், விஷ்ணு ராஜா மற்றும் உதவி மருத்துவா்கள், பிளாஸ்டா் டெக்னீசியன்கள், செவிலியா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.